முகக்கவசம் அணிவது பாதுகாப்பாக இருக்கும். கொரோனா தொற்றிலிருந்து மேலும் பாதுகாப்பு கவசமாக கைகளை சுத்தம் செய்தல், சமூகவிலகலைத் தொடர்ந்து முகக்கவசமும் பயன்படும் என்று தெரிவித்திருக்கிறது அமெரிக்காவில் இருக்கும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம். இதனால் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் பயன்படுத்த வேண்டும் என்று உலக நாடுகளும் வலியுறுத்துகின்றன.