நாம் அனைவரும் பாவம் செய்துகொண்டே இருக்கிறோம். தொழுகைகளைத் தவறவிடுகிறோம். தவறுகளைத் திரும்பத் திரும்பச் செய்கிறோம். "இனிமேல் மாறப்போகிறேன்" என்று சத்தியம் செய்கிறோம் — மீண்டும் இடறி விழுகிறோம்.
அதனால்தான் பல இளைஞர்களின் மனதிலும் ஒரு ரகசியமான கேள்வி இருக்கிறது:"நான் தொடர்ந்து பாவம் செய்தாலும் அல்லாஹ் இன்னும் என்னை நேசிப்பானா?"
'கற்க கசடற இஸ்லாம்' தொடரின் இந்த 7-வது அத்தியாயத்தில், மனதிற்கு மிகவும் நெருக்கமான இந்தக் கேள்விக்கு குர்ஆன் வசனங்கள் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மூலம் விடை தேடுகிறோம்.
இந்தத் தந்தை-மகள் உரையாடலில் அவர்கள் அலசுபவை:
ஏன் ஒவ்வொரு மனிதனும் பாவம் செய்கிறான்?
குற்ற உணர்ச்சிக்கும் (Guilt), நம்பிக்கை இழப்பதற்கும் (Despair) உள்ள வித்தியாசம்.
அல்லாஹ் தன் கருணையை குர்ஆனில் எப்படி விவரிக்கிறான்?
பாலைவனத்தில் ஒட்டகத்தைத் தொலைத்த அந்த மனிதனின் புகழ்பெற்ற ஹதீஸ்.
மன்னிப்புக் கேட்பது அல்லாஹ்வுக்கு ஏன் அவ்வளவு பிடிச்சிருக்கு?
இந்த அத்தியாயம் பாவங்களைச் சரி என்று சொல்லவில்லை. மாறாக, அல்லாஹ்வின் கருணையைப் புரிந்து கொள்ள உதவுகிறது. ஏனென்றால், நீ செய்த தவறு உன்னை முடிவு செய்யாது. நீ அல்லாஹ்விடம் திரும்புவதே உன்னை முடிவு செய்யும்.