Listen

Description

பசுமை சமுதாய வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி

கோவிட்-19 தொற்று நோய் 2-ம் அலை தீவிரமா இருக்கிற இந்த சமயத்தில் தடுப்பூசி பற்றிய பல்வேறு தகவல்களை  பசுமையின் நேயர்களுக்காக தருகிறார் மருத்துவர். சாம் இளங்கோ அவர்கள்

இந்நிகழ்ச்சியின் வாயிலாக கொரோனா தடுப்பூசி பற்றிய தகவல்களையும், எத்தனை டோஸ் போட வேண்டும், எவ்வளவு கால இடைவெளியில் போடவேண்டும், யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்? யாரெல்லாம் தடுப்பூசி  போட்டுக்கொள்ளக்கூடாது?  இந்த கொரோனா தடுப்பூசி எங்கு பாதுகாப்பாக போட்டுக்கொள்ளலாம்? COVAXIN/ COVISHIELD தடுப்பூசி போட்டுக் கொண்டபின்பு  என்ன மாதிரியான மாற்றங்கள் உடலில் ஏற்படலாம்?  என்பது பற்றிய நேயர்களின் பல்வேறு  சந்தேகங்களுக்கு தொலைபேசி வாயிலாக பதிலளிக்கிறார் மருத்துவர். சாம் இளங்கோ அவர்கள்.
தொடர்ந்து அமைதி அறக்கட்டளை, முன்களப்பணியாளர் திரு.சீனிவாசன் அவர்கள் தங்கள் பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழிமுறைகளை பற்றி விளக்குகிறார். மேலும் பொதுமக்களின்  தடுப்பூசி குறித்த எண்ணங்களை கோகிலா அவர்கள் விளக்குகிறார்.
இந்த நிகழ்ச்சி பசுமையில் 25.4.2021 அன்று இரவு 7-மணிக்கு ஒலிபரப்பாகிறது. கேட்கத் தவறாதீர்கள் நேயர்களே!