இயல் ஒலியோடை சார்பில், ஒலி புத்தகமாக வெளிவந்துகொண்டிருக்கும் 'வால்காவில் இருந்து கங்கை வரை' என்ற நூலின் வரலாற்று பின்னணி குறித்தும், ராகுல சாங்கிருத்தியாயனின் வாழ்க்கை பயணம் மற்றும் புத்தகத்தின் உள்ளடக்கம் உணர்த்தும் செய்திகளைக் குறித்தும் எழுத்தாளர் ஆயிஷா நடராஜனுடன் மேற்கொண்ட உரையாடலை கேட்கவுள்ளீர்கள். இயல் ஒலியோடையை தொடர்ந்து ஆதரிப்பதற்கு நன்றி. நுட்பம் தமிழ் மொழியில் தழைக்கச் செய்வோம்.