சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம் வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல் அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன் சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.