உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ? அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சமோ? மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.