HR&CE தொடங்கியுள்ள கல்லூரி வேலைவாய்ப்புகளுக்கு ‘இந்துக்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்’ என்ற நிபந்தனை விமர்சனம் செய்யப்படுகிறது. ‘அரசியல் சட்டத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது’ என்கிறார் கி.வீரமணி. சீமானும் எதிர்க்கிறார். இது சரியா? இந்து கோயில் வருமானத்தில் நடைபெறப் போகும் கல்லூரியில் இதர மதத்தினரை பணியமர்த்தினால் அது என்னென்ன சிக்கல்களை கொண்டுவரக் கூடும்? இதில் சட்டரீதியாக உள்ள சிக்கல்கள் என்ன? அரசியல் ரீதியில் இதை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? -scroll.in இணையதளத்தில் Legal affairs editor- ஆக பணியாற்றிய பத்திரிகையாளர் ஸ்ருதிசாகர் யாமுனன, மகஇக முன்னால் செயலர் தோழர் மருதையன் ஆகியோர் பங்கேற்ற ட்விட்டர் ஸ்பேஸ் கூட்டத்தின் ஆடியோ இணைப்பு கீழே உள்ளது. வாய்ப்பிருப்போர் கேளுங்கள், பகிருங்கள்!