இஸ்ரேலை சேர்ந்த NSO நிறுவனம் Pegausus என்ற உளவு மென்பொருளை தயாரித்து உலகின் பல நாடுகளுக்கு விற்றுள்ளது. அந்த நாடுகள், இந்த செயலியைப் பயன்படுத்தி, பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரையும் ஒட்டுக் கேட்டுள்ளனர். இந்தியாவில் சித்தார்த் வரதராஜன், ரோகினி சிங் உள்ளிட்ட பல முக்கியமான பத்திரிகையாளர்களும், ராகுல்காந்தி போன்ற அரசியல்வாதிகளும், பிரசாந்த் கிஷோர் போன்ற தேர்வல் வல்லுனர்களும் உள்ளனர். அதிர்ச்சியளிக்க கூடிய இந்த உளவு நடவடிக்கை பற்றிய விவாதம் இது. பத்திரிகையாளர்கள் விஜய்சங்கர் ராமச்சந்திரன், அசீப், சபா நாவலன் மற்றும் Cyber security expert வினோத் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் பலர் பேசினார்கள். முழுமையாக கேளுங்கள். இந்த பிரச்னை குறித்த ஒரு கண்ணோட்டத்தை பெறுவதற்கு இந்த விவாதம் உதவி செய்யும்.