Listen

Description

சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- கௌதம் நாராயண்- நிழல்களின் ஓலம்- உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன்.கௌதம் நாராயணன் அவர்கள் திருநெல்வேலிக்காரர். ஏறத்தாழ பத்தாண்டு காலமாக எழுத்துலகில் உள்ளார்.  இவர் ஆங்கிலத்தில் சோனியா என்ற ஒரு நாவலும், தமிழில் கறை என்ற நாவலும் வெளியிட்டிருக்கிறார். நிறைய இவரது சிறுகதைகள் பல்வேறு இணைய இதழ்களில் வந்து கொண்டிருக்கின்றன. . எண்ணூறு பக்கங்கள் கொண்ட இவரது நீண்ட நாவல் ஒன்று வெளிவர உள்ளது. திருநெல்வேலியின் பின்னணியில், ஒரு மழைக்கால இரவில் தொடங்கும் இந்தக் கதை, ஆட்டோ ஓட்டுநரான முத்தப்பன் என்பவரின் வாழ்வின் ஒரு பகுதியை நமக்குக் காட்டுகிறது. வெறும் ஒரு பயணத்தைப் பற்றிய கதையாகத் தொடங்கி, மெல்ல மெல்ல மனித மனதின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் வஞ்சம், இழப்பு மற்றும் கடந்த கால நிழல்கள் எழுப்பும் ஓலத்தைப் பற்றிப் பேசுகிறது. அமைதியாகத் தோன்றும் ஒரு வாழ்வின் பின்னால் எவ்வளவு பெரிய கொந்தளிப்புகள் இருக்கக்கூடும் என்பதை இக்கதை வெளிப்படுத்துகிறது.