டாஸ்மாக் துறையில் ரூ 1000/- கோடி-க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தந்த ரிப்போர்ட்டு-க்கு, 'எந்த முறைகேடும் நடக்கவில்லை. சட்டரீதியாக சந்திக்க தயார்' என சவால் விட்டுள்ளார் செந்தில் பாலாஜி. பின்னணியில் டாப் லெவலில் நடந்த சீக்ரெட் மீட். குறிப்பாக மேலிடத்தில் இருந்து கொடுக்கப்பட்ட நம்பிக்கையான ஒரு மெசேஜ். அதன்பிறகே சீறி இருக்கிறார் செந்தில் பாலாஜி என்கிறார்கள். மேலும், 'டெல்லி டார்கெட்டில் ஐந்து அமைச்சர்கள் உள்ளனர். கவனமாக இருக்க வேண்டும்' என்றும் அலெர்ட் கொடுத்துள்ளார் மு.க ஸ்டாலின்.இன்னொரு பக்கம், இங்கே அதிமுக-விலோ, செங்கோட்டையினால் பெரும் தலைவலி-க்கு ஆளாகியிருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள். லேட்டஸ்டாக சட்டமன்றத்தில், எடப்பாடி நகர்வுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத செங்கோட்டையன். இதையொட்டிய கேள்விக்கு 'அவர போய் கேளுங்க' என ஓபனாகவே பேசிய எடப்பாடி. செங்கோட்டையன் நகர்வுக்கு பின்னணியில் இருப்பது யார்?அடுத்தகட்ட ஆக்ஷனில் இறங்கப் போகிறாரா எடப்பாடி? என்ன நடக்கிறது?