Listen

Description

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் காவல் துறை உயரதிகாரி (Inspector General of Police) கே. ஆர்கேஷ் அவர்கள். மிகவும் கடினமான, சவாலான பகுதிகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்துள்ளார். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் காஷ்மீர் கிளர்ச்சி ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு தலைமையேற்று செயல்பட்டவர். சந்தனக் கடத்தல் வீரப்பனை தேடும் நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியவர். அவர் ஒரு கல்வியாளரும் கூட. மனிதவியல் (Anthropology) துறையில் முதுகலைப் பட்டமும், நாட்டுப்புறவியல் (Folklore) துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். மெல்பனில் நடைபெற்ற Fourth International Humanists Conference யில் கலந்துகொண்ட அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர் றைசெல்.